தமிழ் மாநில கம்யூனிஸ்டு கட்சியின் துவக்கவிழா, கொடி, சட்டதிட்ட அறிமுக விழா, மாநில தலைமை அலுவலகம் திறப்பு விழா இன்று 30: 8:2020 அன்று அக்கட்சியின் நிருவன தலைவர் திரு.அப்துல் ரகுமான் அவர்களின் வழிகாட்டுதலில் மாநில பொது.செயலாளர் திரு :மதுசூதனன் தலைமையில் நீலகிரி மாவட்டம் சேரங்கோட்டில் வைத்து சிறப்பாக நடைபெற்றது. இதில் சிறப்பாக மத ஒற்றுமை, பெண்விடுதலை, சாதி ஒழிப்பு போன்றவை குறித்து பேசப்பட்டது இதில் இந்து ,முஸ்லிம், கிருஸ்து ஆகிய மதங்களிலிருந்து மூன்று மதபோதகர்கள் இந்த விழாவை தொடங்கி முடிந்துவைத்தனர்.
Popular posts
29:6:2020 Braking News ஜீ ஜின்பிங்கும் மோடியும் ஊஞ்சலாடுகிறார்கள்.. சீனத் துருப்புகள் ஊடுருவுகிறது.. ப.சிதம்பரம் சாடல் சென்னை: சீன நிறுவனங்களிடம் இருந்து பிரதமரின் நிவாரண நிதியம் பணம் பெற்றது எப்படி என ப சிதம்பரம் கேள்வி எழுப்பியுள்ளார். லடாக் எல்லை பிரச்சினை விவகாரத்தில் மத்திய அரசுக்கும் காங்கிரஸ் கட்சிக்கும் கடும் மோதல் ஏற்பட்டுள்ளது. பிரதமர் எல்லையில் நடப்பதை மறைக்கிறார், சீனாவுக்கு நற்சான்று தருகிறார் என காங்கிரஸ் கட்சி பிரதமர் மோடியை கடுமையாக விமர்சித்திருந்தது. இந்த நிலையில் சோனியாவை தலைவராக கொண்ட ராஜீவ்காந்தி அறக்கட்டளைக்கு சீனாவிலிருந்து நன்கொடை பெற்றதை பாஜக சுட்டிக் காட்டி விமர்சனங்களை முன் வைத்தது. பெரிய பெரிய கூடாரம்.. அதிர வைத்த அந்த 9 கிமீ பகுதி.. கல்வானில் சீனாவின் திட்டம்தான் என்ன? பின்னணி! கொரோனா குற்றச்சாட்டு இந்த நிலையில் பிரதமர் நரேந்திர மோடியின் கொரோனா நிதி குறித்து (பிஎம் கேர்ஸ்) காங்கிரஸ் கட்சி கேள்வி எழுப்பியுள்ளது. இந்த நிதிக்கு சீனாவில் இருந்து நன்கொடை பெறப்பட்டுள்ளதாக காங்கிரஸ் நேற்றைய தினம் குற்றம்சாட்டியுள்ளது. மேலும் சீனாவை ஏன் ஆக்கிரமிப்பாளர் என பிரதமர் மோடி அழைக்கவில்லை என்றும் காங்கிரஸ் கட்சி கேள்வி எழுப்பியது. ப சிதம்பரம் நிவாரண நிதியம் இந்த நிலையில் முன்னாள் நிதி அமைச்சர் ப சிதம்பரம் தனது ட்விட்டர் பக்கத்தில் கூறுகையில் 2005-ம் ஆண்டில் ராஜீவ் காந்தி அறக்கட்டளை ரூ.1 கோடியே 45 லட்சம் நன்கொடை பெற்றது தவறு என்றால், 2020-ம் ஆண்டில் சீன நிறுவனங்களிடம் இருந்து கோடிக்கணக்கான ரூபாய்களை பிரதமர் மோடியின் தனிக் கட்டுப்பாட்டில் உள்ள ‘பி.எம்.-கேர்ஸ்' (பிரதமரின் குடிமக்கள் உதவி மற்றும் அவசரகால சூழ்நிலைகளில் நிவாரணம்) நிதியம் பெற்றதே, அது எப்படி நியாயம்? ஊடுருவல் சீன நிறுவனங்கள் சீனா எப்போது ஊடுருவியது? 2013, 2014, 2018, 2020-ல் ஊடுருவல் நடைபெற்றது. இந்த ஊடுருவல்களுக்கு பிறகு பிரதமர் மோடியின் கட்டுப்பாட்டில் உள்ள நிதியம் சீன நிறுவனங்களிடம் இருந்து நிதி பெற்றது மாபெரும் குற்றமல்லவா? 2005 ஆம் ஆண்டில் ராஜீவ் காந்தி அறக்கட்டளை ரூ 1.45 கோடி நன்கொடை பெற்றது தவறு என்றால் 2020 ஆம் ஆண்டில் சீன நிறுவனங்களிடமிருந்து கோடிக்கணக்கான ரூபாய்களை பிரதமர் மோடியின் தனிக் கட்டுப்பாட்டில் உள்ள PM-CARES நிதியம் பெற்றதே, அது எப்படி நியாயம்? 1,015 பிற்பகல் 9:23 - 28 ஜூன், 2020 Twitter விளம்பரத் தகவல் மற்றும் தனியுரிமை இதைப் பற்றி 382 பேர் பேசுகிறார்கள் ஊஞ்சலாடும் 2020 மார்ச், ஏப்ரல் மாதங்களில் சீன நிறுவனங்கள் நிதி கொடுக்கிறார்கள். அதே மார்ச், ஏப்ரல் மாதங்களில் சீனத் துருப்புகள் ஊடுருவுகின்றன, இது எப்படி இருக்கு? சீன அதிபர் ஜீ ஜின்பிங்கும், இந்திய பிரதமர் மோடியும் ஊஞ்சலாடுகிறார்கள், சீனத் துருப்புகள் ஊடுருவுகின்றன, இது எப்படி இருக்கு? என ப சிதம்பரம் தனது ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.
• R.அகிேஷ் (முதன்மை துணை ஆசிரியர்)
மனித உரிமைகள் மீட்பு (மாத இருமுறை இதழ்) செய்திகள்: 26:7:2020 புதுக்கோட்டை:புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி தாலுக்கா பாப்பான்விடுதி கிராமத்தில் வசித்து வரும் S P N செல்வம் Ex கவுன்சிலர் தேர்தல் முன்விரோத காரணமாக அதே கிராமத்தை சேர்ந்த சத்தியமூர்த்தி மற்றும்10 அடியாட்களுடன் சேர்ந்து 25/07/20 காலை 11 மணிக்கு வீட்டிற்கு அத்துமீறி நுழைந்து செல்வத்தை பெண் என்றும் பாராமல் வெட்டி விட்டு தப்பி ஓடி விட்டார்கள் தற்போது ஆலங்குடி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார் இது சம்மந்தமாக ஆலங்குடி காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யாமல் ஏமாற்றி வருகிறார்கள். நடவடிக்கை தாமதமாவதால் குற்றவாளிகள் தப்பிக்க ஏதுவாகிறது. இச்சம்பவம் அப்பகுதியில் மிகுந்த பரபரப்பை ஏற்ப்படுத்தியுள்ளது.
• R.அகிேஷ் (முதன்மை துணை ஆசிரியர்)
தமிழகத்தில் ஒரே நாளில் 5,000 பேர் டிஸ்சார்ஜ்; குணமடைந்தோர் மொத்த எண்ணிக்கை 1 லட்சத்தை தாண்டியது! சென்னை: தமிழகத்தில் இன்று ஒரே நாளில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்ற 5,000 பேர் மருத்துவமனைகளில் இருந்து டிஸ்சார்ஜ் ஆகியுள்ளனர். தமிழகத்தில் இன்று மட்டும் 4,496 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. இதனால் கொரோனா பாதித்தோர் மொத்த எண்ணிக்கை 1,51,820 ஆக அதிகரித்தது. கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றவர்களில் 5,000 பேர் இன்று டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர். இதனையடுத்து கொரோனாவால் தமிழகத்தில் குணமடைந்தோர் எண்ணிக்கை 1,02,310 ஆகவும் உயர்ந்துள்ளது. சென்னையில்தான் அதிகபட்சமாக 1484 பேர் மருத்துவமனைகளில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். செங்கல்பட்டில் 604 பேரும் மதுரையில் 1188 பேரும் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர்
• R.அகிேஷ் (முதன்மை துணை ஆசிரியர்)
12:6:2020 ஆக்கிரமிப்பு காஷ்மீரில் 10 பாக். ராணுவ முகாம்களை அழித்து இந்திய ராணுவம் அதிரடி- பயங்கர சேதம் ஶ்ரீநகர்: இந்திய ராணுவம் நடத்திய அதிரடி பதிலடியில் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியில் 10 பாகிஸ்தான் ராணுவ முகாம்கள் அழிக்கப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ஜம்மு காஷ்மீர் எல்லையில் பாகிஸ்தான் ராணுவம் தொடர்ந்து அத்துமீறி வருகிறது. எல்லை கட்டுப்பாட்டுக் கோட்டுப் பகுதியில் தீவிரவாதிகளையும் ஊடுருவச் செய்து வருகிறது. இதற்கு ராணுவத் தரப்பில் பதிலடி கொடுக்கப்பட்டு வருகிறது. எல்லையில் பாகிஸ்தானின் அத்துமீறிய தாக்குதலில் ராணுவ வீரர் ஹர்சரண் சிங் வீர மரணத்தை தழுவினார். இதனையடுத்து ராணுவம் உக்கிரமான பதிலடி கொடுத்தது. இதில் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியில் இருந்த 10 பாகிஸ்தான் ராணுவத்தின் முகாம்கள் அடியோடு அழிக்கப்பட்டுவிட்டதாக செய்திகள் தெரிவிக்கின்றன. அக்ரிமெண்ட் போட்டுவிட்டோம்.. லடாக் எல்லையில் நடக்கும் எதிர்பாராத மாற்றங்கள்.. மௌனம் கலைத்த சீனா! இத்தாக்குதலில் பாகிஸ்தான் ராணுவத்துக்கு கடும் சேதம் ஏற்படுத்தப்பட்டுள்ளதாகவும் ராணுவ தகவல்கள் தெரிவிக்கின்றன
• R.அகிேஷ் (முதன்மை துணை ஆசிரியர்)
4:7:2020 செய்திகள்: கழிவுத் தொட்டியில் இறங்கிய நால்வர் உயிரிழப்பு: பலியானவர்களின் குடும்பத்துக்கு ரூ.50 லட்சம் இழப்பீடு : திருமாவளவன் வலியுறுத்தல் தூத்துக்குடியில் கழிவு நீர் தொட்டியில் சுத்தம் செய்ய இறங்கியபோது உயிரிழந்த 4 தொழிலாளிகளின் குடும்பத்திற்கு ரூ.50 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும், வேலை வாங்கியவர் கொலைக்குற்றத்தில் கைது செய்யப்பட வேண்டும் என திருமாவளவன் வலியுறுத்தியுள்ளார். இதுகுறித்து விடுதலைச் சிறுத்தைகள் தலைவர் திருமாவளவன் நேற்று வெளியிட்ட அறிக்கை: “தூத்துக்குடி மாவட்டம் செக்காரக்குடியில் மனிதக்கழிவுத் தொட்டியில் இறங்கி சுத்தம் செய்யும்போது இராஜா, பாலா, பாண்டி, தினேஷ் ஆகிய 4 தொழிலாளிகள் நச்சுவாயுவில் சிக்கி மூச்சுத்திணறி உயிரிழந்துள்ளனர். சட்டத்துக்கு எதிராகவும், உச்சநீதிமன்ற ஆணைக்குப் புறம்பாகவும் தொழிலாளிகளை இப்படி மனிதக்கழிவுத் தொட்டியில் இறங்கச் சொல்லிய வீட்டு உரிமையாளர் மீது கொலை வழக்கு பதிவு செய்து கைதுசெய்ய வேண்டும் என்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் வலியுறுத்துகிறோம். கழிவுநீர்/ மனிதக்கழிவு அகற்றும் பணியில் மனிதர்களை ஈடுபடுத்தக்கூடாது என்று 2014 ஆம் ஆண்டு உச்ச நீதிமன்றம் தடை விதித்தது. தவிர்க்க இயலாத தேவையினடிப்படையில் அவ்வாறு எவரேனும் ஈடுபடுத்தப்பட்டால் அவர்களுக்கு முகக்கவசம், கையுறை, பாதுகாப்பு பெல்ட் உள்ளிட்ட அனைத்துக் கருவிகளும் வழங்கப்பட வேண்டும்; அருகில் ஒரு ஆம்புலன்ஸ் நிறுத்தப்பட்டு இருக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது. ஆனால் இந்த உத்தரவை மாநில அரசுகள் மதிப்பதில்லை. தொடர்ந்தும் இந்தப் பணியில் மனிதர்கள் ஈடுபடுத்தப்படுகிறார்கள். கருவிகளைக் கொண்டு சுத்தம் செய்வதைவிட மனிதர்களைக்கொண்டு சுத்தம் செய்வது மலிவாக இருக்கின்ற காரணத்தினால் தனிநபர்கள் தொடர்ந்து இந்தப் பணியில் துப்புரவுத் தொழிலாளிகளை ஈடுபடுத்துவது தொடர்கிறது. இத்தகைய அவலம் தடுத்து நிறுத்தப்பட வேண்டுமெனில், இவ்வாறு மரணம் நேரும்போது இந்தப் பணியில் ஈடுபடுத்திய நபர்களைக் கொலை வழக்கில் கைது செய்யவேண்டும் . கழிவுநீர்த் தொட்டி நச்சுவாயுக் கசிவால் உயிரிழக்கும் தொழிலாளிகளின் குடும்பத்துக்கு 10 இலட்ச ரூபாய் இழப்பீடு வழங்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் 2014ம் ஆண்டுத் தீர்ப்பில் குறிப்பிட்டுள்ளது. தற்போதைய சூழலில் அந்தத் தொகை போதுமானதல்ல. எனவே, உயிரிழந்தோர் குடும்பத்தினருக்கு தலா 50 இலட்ச ரூபாய் இழப்பீடு வழங்கப்பட வேண்டும் என்று வலியுறுத்துகிறோம். பேரூராட்சி, நகராட்சி, மாநகராட்சி உள்ளிட்ட அனைத்து நகர அமைப்புகளுக்கும் கழிவுநீர் அகற்றுவதற்கான கருவிகளைத் தமிழக அரசு உடனடியாக வழங்கவேண்டும். இதற்கு மேல் ஒருவர் கூட இத்தகைய விபத்தில் உயிரிழக்காத வகையில் தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று தமிழக அரசை கேட்டுக் கொள்கிறோம்”. இவ்வாறு திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
• R.அகிேஷ் (முதன்மை துணை ஆசிரியர்)
Publisher Information
Contact
humanrightswatch2019@gmail.com
9543410000
NO. 61, VENKATA MAISTRY STREET, MANNADY, CHENNAI- 600001
About
Monthly (twice) Magazine
Share this page
Email
Message
Facebook
Whatsapp
Twitter
LinkedIn